போட்டி முடியும் முன்னரே ஆஸ்பிடலுக்கு சென்ற இந்திய வீரர் – அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு

IND
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியானது அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

shaheen afridi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது துவக்கத்திலேயே ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க கோலி மட்டும் நிதானித்து 57 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து பண்ட் 39 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 68 ரன்களும் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரான ஹார்டிக் பாண்டியா பேட்டி முடியும் முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

pandya

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது 8 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய பவுன்சர் பந்தில் தோல் பகுதியில் காயமடைந்த அவர் ஆட்டமிழந்து வெளியேறும் போது தனது தோள் பட்டையை பிடித்தவாறு வெளியேறினார். பின்னர் 2-வது இன்னிங்சில் போது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை அவருக்கு பதிலாக இஷான் கிஷன் நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்கள மட்டும் சாதாரணமா எடுத்துக்காதீங்க. இந்திய அணியை எச்சரித்த – ஹர்பஜன் சிங்

மேலும் காயமடைந்த பாண்டியா மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய சென்றுள்ளார் என்ற தகவலும் அதன் பின்னர் வெளியானது. ஏற்கனவே பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா தற்போது பேட்டிங்கிலும் நேற்று பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement