அவங்கள மட்டும் சாதாரணமா எடுத்துக்காதீங்க. இந்திய அணியை எச்சரித்த – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்னரே இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

INDvsPAK

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் ,முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் இந்த போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியைப் பற்றி நிறைய பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

பாகிஸ்தான் அணி எப்போதும் கணிக்க முடியாத ஒரு அணியாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். ஏனெனில் கடந்த கால சாதனைகள் மீது நாம் கவனம் செலுத்தக் கூடாது என்பதை நினைக்கிறேன். தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Jadeja

மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தற்போது அதிகப்படியான போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடவில்லை. இதன் காரணமாக அதை வைத்து எதையும் கூற முடியாது. போட்டி நாளன்று என்ன நடக்கிறதோ ? அது தான் இறுதி. நம்முடைய அணி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியை நம்மால் எளிதில் வீழ்த்த முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி முதலில் பேட்டிங் : பிளேயிங் லெவனில் இடம்பெற்ற தமிழக வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒரு அணி மற்ற அணியை வீழ்த்துவது என்பது களத்தில் நடைபெறும் செயல்பாடுகளைப் பொருத்தது தான். அதே போன்று பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஹர்பஜன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement