முதல் 2 போட்டியை நாங்கள் தோற்றதும் இப்படி நடக்கும்னு நான் நெனச்சி கூட பாக்கல – தொடர்நாயகன் பாண்டியா பேட்டி

- Advertisement -

ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதன் பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த டி20 தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

pandya

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே இறுதி நேரத்தில் களமிறங்கி சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தருகிறார். டி20 தொடரில் பேட்டிங் மூலம் தனது பங்களிப்பை அளித்த அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் தோனிக்கு பிறகு சிறந்த பினிஷராக இந்திய அணியில் இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் கோலியும் பாண்டியாவை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்.

அதற்கேற்றார் போல் அவரது ஆட்டமும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. எவ்வளவு பெரிய இலாக்காக இருந்தாலும் நேர்த்தியாக விளையாடி இந்திய அணிக்காக தற்போது வெற்றிகளை தேடித் தரும் வீரராக பாண்டியா பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் டி20 தொடரை முடித்த அவர் தொடர் நாயகன் விருது பிறகு பேசும்போது கூறியதாவது :

pandya 2

இந்த விருதினை பெறுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி ஒரு ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டிக்கு பின்னர் தொடரை எப்படி முடிக்க போகிறோம் என்று தெரியவில்லை. மேலும் நாங்கள் இந்த நான்கு போட்டிகளில் எத்தனை போட்டிகளை வெற்றி பெறுவோம் என்று தெரியவில்லை ஆனால் எப்படியோ சமாளித்து 4 போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று விட்டோம்.

Pandya-4

நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை இந்த தொடர் வெற்றி மிகவும் மகிழ்ச்சி. வெற்றிக்கு பிறகு இதுபோன்ற இன்டர்வியூ வழங்குவது பிரச்சனை இல்லை ஏனெனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் கடந்த நான்கு மாதங்களாக நான் என்னுடைய குழந்தையை பார்க்க வில்லை. அதனால் எனது குடும்பத்துடன் எனது குழந்தையுடனும் நான் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் என்று ஹர்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement