இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியா இலங்கைத் தொடரில் ஒருநாள் போட்டிகளின் போது மிகவும் தடுமாறினார். இருப்பினும் அவரின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி நிர்வாகம் டி20 தொடருக்கான அணியிலும் அவரை இடம்பெறச் செய்துள்ளது. எப்பொழுதுமே ஹார்திக் பாண்டியா தன்னுடைய செயல்களின் மூலம் செய்திகளில் வருவது புதிதல்ல.
தனது திறமையான ஆட்டத்தின் மூலம் அடிக்கடி பேசப்பட்டு வரும் அவர் போட்டிக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அதிகம் சமூகவலைதளத்தில் பேசப்படும் ஒரு வீரராகவே இருந்துவருகிறார். இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் போது அவர் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி எந்த ஒரு போட்டிக்கு முன்பு கலந்து கொள்ளும் இரு அணிகளின் தேசியகீதம் ஒலிக்கப்படும். அந்தவகையில் தற்போது நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணியின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன. இதில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட பின்னர் இலங்கை நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
Is it just me that saw @hardikpandya7 singing the SL national anthem, then? #SLvInd pic.twitter.com/TuALbiRFu4
— Pranith (@Pranith16) July 25, 2021
அப்போது இலங்கை வீரர்கள் அவர்களது தேசியகீதத்தை பாடிக்கொண்டிருக்க ஹார்டிக் பாண்டியா அந்த தேசியகீதத்தை பாடினார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பண்டியா இந்த டி20 தொடரின் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இடம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.