இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.
Surgery done successfully ????
Extremely grateful to everyone for your wishes ❣️ Will be back in no time! Till then miss me ???? pic.twitter.com/XrsB8bWQ35
— hardik pandya (@hardikpandya7) October 5, 2019
எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள லண்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது பாண்டியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை முடிந்து தான் நலமாக இருப்பதாக தற்போது பதிவிட்டுள்ளார். பாண்டியாவின் இந்த பதிவை கண்டா ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பி.சி.சி.ஐ யும் அவர் குணமடைய வாழ்த்தியுள்ளது. பாண்டியா 5 முதல் 6 மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.