3 ஆவது பிங்க் பால் டெஸ்ட் : இந்திய அணிக்கு திரும்பியுள்ள அதிரடி வீரர் – ராட்சச சிக்ஸர்களை பறக்கவிட்டு பிராக்டீஸ்

Rohith
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடும் 17 பேர்கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார்.

- Advertisement -

ஷர்துள் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த உமேஷ் யாதவ் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் அந்த தொடரில் காயமடைந்த கே.எல்.ராகுலும் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஷபாஸ் நதீம் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ்.

- Advertisement -

Pandya 3

வருகிற 24ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள புதிய ஸ்டேடியமான சர்தார் ஸ்டேடியத்தில பகல்-இரவு ஆட்டமாக நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்டான பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்காக புஜாரா மற்றும் பாண்டியா பிங்க் பாலில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில் புஜாரா தடுப்பாட்டம் ஆட பாண்டியாவோ அதிரடி ஷாட்டுகளை பறக்க விட்டார். காயம் காரணமாக இரண்டு ஆண்டு கழித்து திரும்பி வந்துள்ள பாண்டியாவின் அதே அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டியுள்ளார்.

Pandya

2018ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிராக கடைசியாக டெஸ்டில் ஆடிய பாண்டியா மீண்டும் தனது டெஸ்ட் இன்னிங்ஸை இங்கிலாந்துடனே தொடர உள்ளதால் ரசிகர்கள் இப்போதே பாண்டியாவின் இன்னிங்ஸ் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement