மீண்டும் அதிரடி சதம். தனது காட்டடி ஆட்டம் மூலம் எதிரணியை பயமுறுத்திய பாண்டியா – இத்தனை சிக்ஸர்களா ?

Pandya
- Advertisement -

கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியாவின் காயம் ஒருபுறம் இருந்தாலும் புதிதாக அணியில் பல வீரர்கள் அவரை இடத்தை நிரப்ப ஆரம்பித்துவிட்டனர் .

Pandya 2

- Advertisement -

இந்நிலையில் காயத்திற்கு பின்னர் களம் இறங்கி ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்துள்ளார். டாக்டர் டி ஒய் பாட்டில் டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரிலையன்ஸ்-1 அணிக்காக களம் இறங்கி விளையாடி வருகிறார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் டி ஒய் பாட்டில் விளையாடிய ஹார்திக் பாண்டியா 37 பந்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். மேலும் 39 பந்துகளை சந்தித்த பாண்டியா 10 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் குவித்து தனது அதிரடி காண்பித்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரிலும் அவரது அதிரடி நிச்சயம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியாவின் ரசிகர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

Pandya 1

மேலும் காயத்திற்கு பிறகு எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பதை இந்த அதிரடி மூலம் நிரூபித்துள்ளார். மேலும் காயத்திற்கு பிறகு நிச்சயம் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement