இலங்கை வீரருக்கு தனது பேட்டை பரிசாக அளித்த ஹார்டிக் பாண்டியா – எந்த வீரருக்கு தெரியுமா ?

Pandya-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று துவங்கியது. இந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வீரரான ஹர்டிக் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி போட்டி துவங்கும் முன் இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து கொண்டிருக்கையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன பாண்டியா இலங்கை அணியின் வீரரான சமிகா கருணரத்னாவிற்கு தனது பேட் ஒன்றினை பரிசளித்தார்.

- Advertisement -

எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவிசெய்யும் பாண்டியா தற்போது அணிகளை கடந்து தனது பேட்டை இலங்கை வீரருக்கு பரிசளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கருணரத்னே ஒருநாள் தொடரின் போது பேட்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு தனது பேட்டை பாண்டியா பரிசளித்துள்ளார். அவர் பேட்டை வழங்கும் போது அவருடன் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் அருகில் இருந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement