இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் தயாராகி வருகிறது. உலக கோப்பை தொடருக்கு முன் பயிற்சி போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்தது. இந்த உலக கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.
அதில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அவர் 2011ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இடையே உள்ள வித்தியாசம் ஒன்றினை குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பதிவு செய்த ஹர்டிக் பாண்டியா 2011ம் ஆண்டு இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்தினேன். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அதனை கொண்டாடினேன். ஆனால் தற்போது 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் ஒரு வீரராக நான் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது/ என் சிறுவயது முதலே நான் கண்ட கனவு இன்று நனவாகி உள்ளது. என்று பாண்டியா பதிவிட்டுள்ளார்.