இரண்டாவது ஒருநாள் போட்டி : வேறுவழியின்றி அதிரடி முடிவை கையில் எடுத்த பாண்டியா – ரசிகர்கள் பாராட்டு

Pandya-5
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டியும் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

pandya

இந்நிலையில் இந்த போட்டியின் ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி திணறி வந்த நிலையில் வேறு வழியின்றி இக்கட்டான தருணத்தில் தனது உடல் நிலையை பற்றி கூட கவலைப்படாமல் ஹர்திக் பாண்டியா பந்துவீச முன்வந்தார். ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சாளர் சைனி ரன்களை வாரி வழங்க அவரது ஓவர்களை முடிக்கும் எண்ணத்தில் பந்தை கையில் எடுத்த ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டாக ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றினார்.

pandya 1

கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் செய்துகொண்ட ஆபரேஷனுக்கு பிறகு 16 மாதங்களாக அவர் பந்து வீசவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் முழுவதுமாக ஒரு பேட்ஸ்மேனாகவே அவர் களமிறங்கினார். கடந்த போட்டியிலும் அவர் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்து 90 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் இந்திய அணியின் நிலையைக் கருதி பந்துவீச முன்வந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement