அடுத்த ஐந்து மாதங்களுக்கு பாண்டியா கிரிக்கெட்டை நினைத்துகூட பார்க்க முடியாதாம் காரணம் இதுதான் – சோகத்தில் பாண்டியா

Pandya-1
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.

Pandya 1

- Advertisement -

எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் வீரியம் குறித்து அறிய அவர் லண்டன் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்த பின் லண்டன் செல்ல இருக்கும் பாண்டியா அடுத்த வங்கதேச தொடரில் விளையாட மாட்டார் என்று தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு வேளை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நிர்பந்தம் ஏற்பட்டால் சுமார் ஐந்து மாதங்கள் வரை அவர் கிரிக்கெட்டை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Pandya

அந்த ஐந்து மாதங்கள் அவர் முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு அவர் லண்டன் சென்று டாக்டர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே முழு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement