இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்திருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது . முன்னதாக இந்தியாவின் பிரதான துவக்க வீரர் ரோகித் சர்மா காயமடைந்த உள்ளதால் அவருக்கு பதிலாக பிரித்திவ் ஷா சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் இவர் ஆடியதன் காரணமாக டெஸ்ட் போட்டியிலும் இவரே ஆடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்தியாவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியதாவது :
தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் சுபமன் கில்லுக்கு கட்டாயம் இடம் கொடுக்கவேண்டும் . மயங்க் அகர்வால் ஒரு துவக்க வீரர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் நன்றாக ஆடுகிறார் அதனால் அவரை நீக்கிவிட முடியாது. பிரித்திவ் ஷாவை நீக்கிவிட்டு சுபமன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கில் நன்றாக ஆடுகிறார். இதன் காரணமாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர் இடத்திற்கு அவரை களம் இறக்க வேண்டும் என்று கூறினார் ஹர்பஜன் சிங். கில் ஏற்கனவே இரட்டை சதம் மட்டுமின்றி நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக அங்கு துவக்க வீரராக களமிறங்கி சதமும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.