Harbhajan Singh : உ.கோ இந்திய அணியில் இவரை தேர்வு செய்யாதது வருத்தம் – ஹர்பஜன் சிங்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

harbhajan
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி உலகக்கோப்பை அணியாகவே நான் கருதுகிறேன். இருப்பினும் இந்திய அணியில் நவ்தீப் சைனியை தேர்ந்தெடுத்து இருக்கலாம். சைனி 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடந்து பந்துவீசும் திறமை உடையவர். அவரை இந்திய அணியில் தேர்வு செய்தால் இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீசிச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

saini

மேலும், நடப்பு ஐ,பி.எல் தொடரில் சைனி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே இந்திய அணியில் இந்த இளம் வீரரை தேர்வு செய்து இருக்கலாம் என்பது என் எண்ணம். இருப்பினும், வரும்காலங்களில் சைனி இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம்வருவார் என்று ஹர்பஜன் கூறினார்.

Advertisement