தற்போது தமிழகத்தை உலுக்கி வரும் ஒரு நிகழ்வு திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டதுதான். மூன்று நாட்கள் கடந்து அந்த குழந்தையை தற்போது மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth pic.twitter.com/5jvUSjS9Eh
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் : சுர்ஜித் குறித்து தனது மனக்குமுறலை வார்த்தைகளாக பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் அவர் குறிப்பிட்டதாவது : நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்தனை கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.
சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது சுஜித் குறித்த பரபரப்பு இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.