தற்போது தமிழகத்தை உலுக்கி வரும் ஒரு நிகழ்வு திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டதுதான். இரண்டு நாட்கள் கடந்து அந்த குழந்தையை தற்போது மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் : சுர்ஜித் குறித்து தனது மனக்குமுறலை வார்த்தைகளாக பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் அவர் குறிப்பிட்டதாவது :நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற அந்த வகையில் என்னால் சுஜித் பெற்றோரின் வலியை உணர முடிகிறது.
அந்த குழந்தை உயிர் பொழச்சி வரணும். உன் தாய்ப்பால் வீரம் இருக்கு நீ கண்டிப்பா வருவ நீ வந்தால் தான் தீபாவளி தங்கமே என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. “Pray For Surjith”