டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் தமிழக வீரரான இவர் விளையாடனும் – ஹர்பஜன் சிங் ஆதரவு

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த 7 ஆவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இந்திய அணியும் தங்களது சிறந்த டி20 அணியை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளது. அதன்படி இந்த அணியில் இருக்க வேண்டிய வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், நிபுணர்கள் என தங்களது கருத்துக்களை அளித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்த தொடரில் விளையாட வேண்டிய ஸ்பின்னர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Dhawan

- Advertisement -

ஏற்கனவே இந்த இந்திய அணியில் சாஹல், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி உலக கோப்பை தொடரில் நிச்சயம் விளையாட வேண்டும் என ஹர்பஜன்சிங் தனது கருத்தினை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பையில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக விளையாடுவது அவசியம்.

ஏனெனில் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. ரன் குவிப்பையும் தடுத்து நிறுத்த முடிகிறது. அதுமட்டுமின்றி பவர்ஃபிளே ஓவர்களிலும் பந்து வீசுகிறார். டெத் ஓவர்களிலும் பந்து வீசுகிறார். அனைத்து திறனும் அவரிடம் உள்ளதால் நிச்சயம் அவரால் உலக கோப்பை தொடரில் நன்றாக செயல்படமுடியும். ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது அவரை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

Varun

நிச்சயம் அவர் அதற்கு தகுதியான ஒரு வீரர் தான். இது மட்டுமின்றி சிஎஸ்கே அணியில் நான் இருந்தபோது முதல் முறை சக்கரவர்த்தியை சந்தித்தேன். அப்போது வலைப்பயிற்சியில் தோனி அனைத்து வேகப்பந்து பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் சிக்சருக்கு விளாசித் தள்ளி கொண்டிருக்க வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை தோனியால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் பல முறை அவரது பந்து வீச்சில் தோனி ஆட்டம் இழக்கவும் செய்தார். இதனால் நிச்சயம் வருன் சக்ரவர்த்தி இந்த உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் என ஹர்பஜன் கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Varun-1

ஏற்கனவே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா தொடரை காயம் காரணமாகவும், இங்கிலாந்து தொடரை யோ-யோ டெஸ்ட் காரணமாகவும் இழந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement