அணியில் இவர் இடம்பிடிக்க இன்னும் எவ்ளோ ரன்தான் இவர் அடிக்கணும் சொல்லுங்க – இளம் வீரருக்காக சப்போர்ட் பண்ணிய ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி நான்காவது வீரர் பற்றிய கேள்வி எழுந்து வருகிறது. அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர் மற்றும் ராகுல் என யாரையும் அந்த இடத்தில் முழுமையாக இந்திய அணி பயன்படுத்தவில்லை.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தொடர்களாக இந்திய அணி 4-வது வீரராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கி வருகிறார். அவர் களமிறங்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது இந்திய அணி நான்காவது வீரர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணி நான்காவது வீரரை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளூர் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இவ்வளவு சிறப்பாக விளையாடி அவரது திறமைகளை வெளிக்காட்டியும் அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. இருப்பினும் நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று சூர்யகுமார் யாதவ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

சூரியகுமார் யாதவ் தற்போது நடந்துவரும் விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 81 குவித்து அசத்திய குறிப்பிடதக்கது. இதில் 8 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும். மேலும் ஐ.பி.எல் மற்றும் இதர உள்ளூர் தொடர்களிலும் தொடர்ச்சியாக சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement