சந்திரயான்-2 விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் இந்திய விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
சந்திரயான் 2 விண்கலம் மார்க்-3 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 8 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் நான ஹர்பஜன் சிங் தனது பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பாகிஸ்தான் நாட்டை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் கிண்டல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் சில நாடுகளில் கொடியில் தான் நிலா இருக்கிறது. ஆனால் சில நாடுகளின் கொடிகள் நிலாவில் உள்ள என்று ஹர்பஜன் பாகிஸ்தான் உட்பட சில அரபு நாடுகளின் கொடிகளை பதிவிட்டார். இதோ அந்த பதிவு :
Some countries have moon on their flags
????????????????????????????????????????????????????????????????????????While some countries having their flags on moon
???????? ???????? ???????? ????????#Chandrayaan2theMoon— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 22, 2019
இதன் விளக்கம் யாதெனில் பாகிஸ்தான் நாட்டு கொடியின் மூலையில் நிலா இருக்கும் ஆனால் இந்தியா இன்று ஏவிய விண்கலம் நிலாவிற்கு செல்வதால் இந்திய கொடியை நிலாவை நடும் என்பது போல மறைமுகமாக குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.