- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணிக்கு விளையாட வந்ததும் ரெய்னாவிற்காக ஹர்பஜன் விட்டுக்கொடுத்தது என்ன – அவரே பகிர்ந்த தகவல்

ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடரில் பத்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அதன் பின்னர் அவர் தனது பயன்படமாட்டார் என்று அவரை கழட்டி விட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருகரம் விரித்து அனைத்துக்கொண்டது. கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ஹர்பஜன் சிங்.

சென்னைக்கு வந்தவுடன் கிட்டத்தட்ட பஞ்சாப் தமிழராகவே மாறி விட்டார் அவர். அந்த அளவிற்கு சென்னையின் விருந்தோம்பல் இருந்துள்ளது. இதற்கு கைமாறாக சுரேஷ் ரெய்னாவிற்கு ஒன்றைச் செய்துள்ளார் ஹர்பஜன் சிங். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் ஜெர்ஸி நம்பர் 3ஐ பயன்படுத்தி வந்தார்.

- Advertisement -

அந்த எண்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா பயன்படுத்தி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும்போது சீனியர் வீரராக இருந்தாலும் அந்த எண்ணை கேட்காமல் சுரேஷ் ரெய்னாவை அதனை வைத்துக் கொள்ளட்டும் என்று பெருமிதமாக விட்டுக் கொடுத்துள்ளார் ஹர்பஜன்.

அவரது 3 ஆம் எண்ணை விட்டுக் கொடுத்துவிட்டு 27ஆம் நம்பரை எடுத்துக்கொண்டார் ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்தநாள். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவர் செய்த இந்த செய்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளது.

முன்னதாக சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்குள் 2006ம் ஆண்டு நுழைந்தபோது 43ஆம் என்னை பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது ஹர்பஜன்சிங் அந்த எண்னை பயன்படுத்தியதால் சுரேஷ் ரெய்னா வேறு எண்னை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by