தற்போது தமிழகத்தை உலுக்கி வரும் ஒரு நிகழ்வு திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டதுதான். மூன்று நாட்கள் கடந்து அந்த குழந்தையை தற்போது மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
இந்நிலையில் சுஜித் குறித்து வருத்தப்படும் விதமாக நேற்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் தனது கருத்துகளை பதிவிட்டு இருந்தார். மேலும் நீ மீண்டு வந்தால் தான் உண்மையான தீபாவளி என்று குறிப்பிட்ட ஹர்பஜன் சிங் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வைத்த தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட ஹர்பஜன் மனைவியுடன் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நேற்று அந்த சிறுவனுக்காக வருத்தப் படுவது போல உங்கள் கருத்துக்களை பதிவிட்டு தீபாவளியும் வேண்டாம் என்றும் என்று கூறினீர்கள்.
About last night.. Diwali celebrations in Bombay+BigB+Basra ???? thank you for the great party sir. @SrBachchan we enjoyed it #jalsadiwali #BachchanDiwaliParty @juniorbachchan pic.twitter.com/PiqnDgGWwx
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 28, 2019
அதே இரவே அமிதாப் பச்சன் கொடுத்த பார்ட்டிக்கு எப்படி உங்களால் செல்ல முடிந்தது எதற்காக நடிக்கிறீர்கள் என்பது போல தங்களது கருத்துக்களை அவரது பதிவிற்கு கமெண்டுகளாக அளித்து வருகின்றனர். ஹர்பஜன் சிங்கின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.