ரோஹித், கோலியை விட டி20 போட்டியில் இவர்தான் இந்திய அணிக்கு தேவை – ஹர்பஜன் பேட்டி

harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. அதன் பிறகு தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.

IND-vs-SA

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட் வலைதள பக்கம் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணி டி20 அணி குறித்து கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணியின் டி20 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான அனைத்து திறமையும் அவர்களிடம் உள்ளது.

மேலும் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் என தற்போது டி20 போட்டிகளில் இந்திய அணி சற்று பலமாகவே உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அவர் ரோகித், கோலி விட குறைந்த வடிவ கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் தன்மையுடையவர்.

dhawan 1

டி20 போட்டிகளில் அவர் விளையாடும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பயமற்ற ஷாட்களும் ரன் குவிக்கும் திறனும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே ஷார்ட் பார்மேட்டில் தவானை நான் சிறந்த வீரர் என்று கூறுவேன் என்று ஹர்பஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement