இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும் சென்னை அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது சென்னை அணி மும்பை அணியுடன் நடைபெற உள்ள போட்டிக்காக மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
Reliving that one magical moment 8 years later! #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/4tF6jHr5qR
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2019
இந்நிலையில் சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி இதே நாளில் ஏப்ரல் 2 2011 ஆம் ஆண்டு இதே இடத்தில் இதே மைதானத்தில் இலங்கை அணியை வென்று உலககோப்பையினை கைப்பற்றியது. அந்த வெற்றி நம் அனைவரின் வெற்றியாகும்.
இன்றுடன் சரியாக 8 ஆண்டுகள் ஆகிறது இந்திய அணி உலககோப்பையினை வென்று இன்றுவரை என்னால் இந்த நாளை மறக்க முடியாது. இந்த நாளை பற்றி பேசினால் என் கண்களில் இருந்து கண்ணீர் கூட தானாக வரும். இந்த நாளில் இந்திய அணியை ஆதரித்த அனைத்து இந்தியர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசினார்.
Bhajju pa on being back to the very same place on the World Cup Anniversary with #Thala himself! #WhistlePodu #Yellove #8YearsLater ???????? pic.twitter.com/mQVQbtpGth
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2019
2011 உலகக்கோப்பை இறுதி போட்டியையும், தோனியின் வின்னிங் ஷாட்டையும் என்னால் எப்போதுமே மறக்க முடியாது. மேலும், வரும் மே மாதம் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டு உலககோப்பையினை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெல்ல வாழ்த்துக்களையும் ஹர்பாஜன் சிங் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.