ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் துவக்க வீரர்களாக இவர்களே விளையாட வேண்டும் – ஹர்பஜன் விருப்பம்

Harbhajan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் இறங்க வேண்டும் என்ற தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா நிச்சயம் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். மேலும் அவருடன் இணைந்து மாயங்க் அகர்வால் துவக்க வீரராக களமிறங்கி விளையாடினால் இந்த ஜோடி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கிறேன்.

Agarwal

ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பிரிதிவி ஷாவின் ஆட்டம் சிறப்பாக இல்லை அதனால் அவரது பார்ம் தற்போது சந்தேகமாக உள்ளது. அதே போன்று கேஎல் ராகுல் விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கி அதை சரி செய்யலாம். ராகுலுக்கு எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் பிரச்சனை இருக்காது எனக் கருதுகிறேன்.

Agarwal-1

அதனால் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று விரும்புவதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement