இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 97 ரன்களை குவித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. அந்த அணியின் குக் மாற்று ஜென்னிங்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்க்கு 54 ரன்களை சேர்த்தனர்.
உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டையும் இழக்காத இங்கிலாந்து அணி, துவக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததும். பின்னர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்காத ஹர்டிக் பாண்டியா இந்த இன்னிங்சில் பிரமாதமாக பந்து வீசினார். 6 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை கொடுத்த 5 விக்கெட் வீசி அசத்தினார். இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகவும் அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், தற்போது ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்பான பந்து வீச்சு, முதல் 5 விக்கெட் வீழ்த்தியற்கு வாழ்த்துக்கள் மேலும், அதிக நிறைய விக்கெட் வீழ்த்துங்கள் ” என்று தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
Great spell @hardikpandya7 first 5 wicket haul in test cricket.. wish you many more.. Go india ???????? ????????????????????
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 19, 2018
கடந்த போட்டியில், தோல்வியடைந்த இந்திய அணியை அனைவரும் விமர்சித்தனர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஹர்டிக் பாண்டியாவை நேரடியாக விமர்சித்தார் . இந்த போட்டியில் மீண்டு எழுந்த ஹர்டிக் பாண்டியா தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தினார். அவரது பந்து நேற்றைய போட்டியில் நன்றாக ஸ்விங் ஆனது.