IND vs WI : ரோஹித் சர்மா பார்முக்கு வந்தது மகிழ்ச்சியா இருக்கு – முன்னாள் வீரருடன் இணைந்து பாராட்டும் விராட் கோலியின் கோச்

Rajkumar
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 190/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்து 64 (43) ரன்கள் எடுக்க இறுதியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்களை வெளுத்து வாங்கி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

Arshdeep Singh IND vs WI

- Advertisement -

அதை தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15, சமர் ப்ரூக்ஸ் 20, ஜேசன் ஹோல்டர் 0, நிக்கோலஸ் பூரன் 18, ரோவ்மன் போவல் 14, சிம்ரோன் ஹெட்மையர் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், அஷ்வின், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஹிட்மேன் மாஸ்:
இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக அதிரடியாகவும் 15 ஓவர்கள் வரை அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். மேலும் அந்த 64 ரன்களால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். கடந்த 10 வருடங்களாக தனது அற்புதமான அழகான பேட்டிங்கால் எதிரணிகளை வெளுத்து வாங்கி இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் அவர் ரசிகர்களால் ஹிட்மேன் என்று கொண்டாடப்படுகிறார்.

இருப்பினும் சமீப காலங்களில் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் பழைய பார்மின்றி தவித்து வந்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காதது மும்பைக்கு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

மிக்க மகிழ்ச்சி:
மேலும் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் ரன்களை குவிக்காத அவர் கபில் தேவ் உட்பட ஒருசில முன்னாள் ஜாம்பவான்களின் விமர்சனங்களையும் சந்தித்தார். அந்த நிலைமையில் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 76* (58) ரன்களை குவித்து பார்முக்கு திரும்பிய அவர் டி20 உலக கோப்பைக்கு முன்பாக இப்போட்டியை போல பெரிய ரன்களை எடுக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Rajkumar

“சமீபத்திய போட்டிகளில் ரோகித் சர்மா பார்ம் இல்லாததை போல் பெரிய ரன்களை எடுக்க தடுமாறினார். ஆனால் இன்று அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை அதன் கேப்டன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைப்போலவே தினேஷ் கார்த்திக்கும் தனது வேலையை கச்சிதமாக செய்தார். இன்றைய போட்டியில் அவர் தன்னை பினிஷர் என்று மீண்டும் நிரூபித்து காட்டினார். டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் உட்பட அனைத்து வீரர்களும் தங்கள் வேலையில் கச்சிதமாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று பாராட்டினார்.

ஆபத்தான பேட்ஸ்மேன்:
அதேபோல் பார்மில் இருக்கும்போது ரோகித் சர்மாவை தவிர இந்த உலகில் வேறு யாரும் ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்க முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ரீதிண்டர் சோதியும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா ஒரு சாம்பியன் வீரர். அவர் பார்மில் இருக்கும் போது உலகிலேயே இதர பேட்ஸ்மேன்களை விட ஆபத்தானவராக தோற்றமளிக்கிறார். எனது வாழ்நாளில் நான் பார்த்த அத்தனை வீரர்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவராக தென்படுகிறார்”

Sodhi

“அவர் களத்தில் இருந்தால் போட்டியை எதிரணியிடமிருந்து இந்தியாவின் பக்கம் திருப்பும் திறமையை கொண்டுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் பார்முக்கு திரும்பியுள்ளது எதிரணிக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் அமையும். அவரது பேட்டியை போலவே கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அவர் நேர்மறையாக செயல்படுகிறார்” என்று கூறினார். இந்த நிலைமையில் இத்தொடரின் 2-வது போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement