இந்தியாவுக்காக சந்தோசப்படுறேன்.. அவர் தான் வெற்றிக்கு காரணம்.. ஆஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்திய கிரேக் சேப்பல்

Greg Chappell
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வென்றது.

இந்த வெற்றிக்கு தொடர் முழுவதும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் கொண்டு வந்து அதை செய்தும் காட்டிய ரோஹித் சர்மா பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அதே போல தொடர் முழுவதும் தடுமாறினாலும் ஃபைனலில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியும் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சேப்பல் பாராட்டு:
அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். இந்நிலையில் பயிற்சியாளர் ரகுல் டிராவிட் தான் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கான திட்டங்களுக்கு முக்கிய காரணமாக இருந்திருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார். இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கிரேக் சேப்பல் – ராகுல் டிராவிட் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்ட 2007 உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் தற்போது அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ராகுல் டிராவிட் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் விடை பெற்றுள்ளார். எனவே அவருக்காக தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கும் கிரேக் சேப்பல் இது பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்-டே பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்”

- Advertisement -

“குறிப்பாக ராகுல் டிராவிட் இந்த வெற்றியின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டின் மீதான அவரது ஆர்வம் எப்போதும் தெளிவாகத் தெரியும். எனவே அவர் இந்த வெற்றிக்கான திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருப்பார். அதனால் இந்த வெற்றி அவருக்கு திருப்திகரமாக இருந்திருக்கும். இந்திய அணியில் உலகக் கோப்பையுடன் தன்னுடைய நேரத்தை அவர் முடித்ததை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பரிசில் அவங்களுக்கும் பங்கு இருக்கு.. இந்திய அணிக்கு 125 கோடி வழங்குவது ஏன்? ஜெய் ஷா விளக்கம்

முன்னதாக ராகுல் டிராவிட்டுக்காகவே இந்த உலகக் கோப்பையை வென்றதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். அத்துடன் ஃபைனல் முடிந்ததும் அவரை தோள் மீது தூக்கிப் போட்டு இந்திய வீரர்கள் கொண்டாடி வழியனுப்பினர். அந்த வகையில் ஒரு வீரராக தொட முடியாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று ராகுல் டிராவிட் விடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement