- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லில்லி, ராபர்ட்ஸ், மார்ஷல், அக்ரம் மாதிரி பும்ரா அதுக்கு குறுக்க நிற்கிறாரு.. கிரேக் சேப்பல் மெகா பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் அசத்தி வரும் அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்து வருகிறார்.

இந்நிலையில் அவரை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் விரிவாக பாராட்டியுள்ளார். இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “நவீன சகாப்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு அழுத்தமான நபராக உருவெடுத்துள்ளார். அவர் ஜாம்பவான் நட்சத்திரங்கள் மட்டுமின்றி தற்போதைய தென்னாப்பிரிக்க சாம்பியன் ககிஸோ ரபாடாவையும் ஒப்பிடுகிறார்”

- Advertisement -

மகத்தான பும்ரா:

“டென்னிஸ் லில்லி மற்றும் ஆண்டி ராபர்ட்ஸ் ஆகியோர் நான் எதிர்கொண்ட முழுமையான வேகப்பந்து வீச்சாளர்கள் என்று எப்போதும் சொல்வேன். தற்போது பும்ரா தனது வழக்கத்திற்கு மாறான ஆக்சன் மற்றும் திறமையான கட்டுப்பாட்டுடன் அந்த ஜாம்பவான்களுக்கு எதிராக எவ்வாறு தன்னை அளவிடுகிறார்? பும்ரா வெளிப்படையாக போராடாதவராக இருந்தாலும் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் லில்லியின் திறனை வெளிப்படுத்துகிறார்”

“அவரின் கொடிய யார்க்கர்கள், குழப்பமான பவுன்ஸ், ரிலீஸ் பாயிண்ட் போன்றவை லில்லியின் திறனை எதிரொலிக்கிறது. ராபர்ட்ஸின் பெருமூளை அணுகுமுறையை பும்ரா பகிர்ந்துள்ளார். அவர்கள் மிருகத்தனமான சக்தியை விட வியூகத்தை நம்பியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2018 பாக்ஸிங் டே டெஸ்டில் பும்ராவின் 6 – 33 ஸ்பெல் அதன் உச்சகட்டத்தை எட்டியது. அது ராபர்ட்ஸின் நவீன எதிரொலியாக இருக்கிறது”

- Advertisement -

ஜாம்பவான்களுக்கு நிகராக:

“பும்ரா அந்தப் பன்முகத்தன்மையை பிரதிபலித்தார். வெறும் 30 போட்டிகளில் 151 விக்கெட்டுகளை 21.03 என்ற சராசரியில் அவர் எடுத்துள்ளது பல்வேறு சூழ்நிலைகளில் சிறந்து விளங்கும் மால்கம் மார்ஸ் ஆதிக்கத்தை நினைவுபடுத்துகிறது. அவரின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் திறன், மேகமூட்டத்தின் கீழ் பந்தை சீம் செய்யும் திறன் ஆகியவை முக்கியமானது. அது மார்ஷலுக்கு எதிராக பேட்ஸ்மாங்கள் எதிர்கொண்ட அதே நிச்சயம் மற்ற தன்மையை காட்டுகிறது”

“மார்ஷல் உங்களுக்கு எந்த அவகாசமும் கொடுக்கவில்லை என்று இயன் போத்தம் குறிப்பிட்டது பிரபலமானது. இன்றைய பேட்ஸ்மேன்கள் பும்ராவை பற்றி அதே போன்ற உணர்வுகளை எதிரொலிக்கிறார்கள். 2021 இங்கிலாந்து, 2022 தென்னாப்பிரிக்க தொடர்களில் வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் போல அவருடைய ரிவர்ஸ் ஸ்விங் பேட்ஸ்மேன்களை உதவியற்றவர்களாக காட்சிப்படுத்தியது”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 அதிரடி மாற்றங்கள் – விவரம் இதோ

“அந்த ஜாம்பவான்கள் போல பும்ரா தம்முடைய சொந்த வழியில் வருங்கால வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் மரபை உருவாக்கி வருகிறார். அவருக்கு எதிராக தவறு செய்யாதீர்கள். பும்ரா தான் இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக குறுக்கே நிற்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -