பேட்டிங் செய்துகொண்டிருந்த போது ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல் – காரணம் இதுதான்

Maxwell
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது. சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் நேற்றைய சிறப்பான ஆட்டத்தை வைத்து ரசிகர் ஒருவர் மீம் ஒன்றினை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

maxwell 1

அந்த மீம் உடன் இணைந்த ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரி விட்டதாக ஸ்மைலி சிம்பளுடன் தனது பதிலை அளித்துள்ளார்.

Advertisement