என்னை அணியில் எடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்கள். மீண்டும் என்மீது அவர்களின் பார்வையை விழவைப்பேன் – இளம் வீரர் சபதம்

Jadeja
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

india

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் தமது பெயர் இடம் பெறாதது குறித்து இளம் வீரர் சுப்மான் கில் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய அணி அறிவிப்பு எப்போது என்று காத்துக்கொண்டிருந்தேன். அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அணியில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் அதைப் பற்றியே சிந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

Gill

தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இனி வரும் போட்டிகளில் அதிக ரன் குவிப்பதிலும், எனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதும் கூடுதல் கவனம் செலுத்த உள்ளேன். நிச்சயம் ஒருநாள் அணியில் இடம் பெறுவேன் என்று கில் கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று அரைசதங்களை அடித்து தொடர் நாயகன் விருதை கில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement