டி20 உலகக்கோப்பை பைனலை விட இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல விளையாடுறதுதான் என் கனவு – இளம்வீரர் நெகிழ்ச்சி

Gill-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே எழுந்து வருகிறது.

INDvsNZ

- Advertisement -

அதில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு இங்கு போட்டியை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறிவருகின்றனர். ஏனெனில் இந்திய அணி இந்த போட்டிக்கு முன்னதாக 24 நாட்கள் வரை இந்திய அணி குவாரண்டின் இருக்க உள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

ஆனால் நியூசிலாந்து அணியோ இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி விட்டு இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளதால் மனரீதியாக நியூசிலாந்து அணிக்கு பலம் அதிகமாக இருக்கும் என்பதினால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Gill

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்றும் இந்த போட்டியில் விளையாடுவதே என்னுடைய கனவு போட்டி என்றும் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை விட எனக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது தான் பெரிய கனவு.

gill

கடந்த போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளதால் நிச்சயம் இன்று இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பேன் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து நிச்சயம் இந்த சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement