அணிக்கு தேவை ஏற்பட்டால் நான் இதை செய்ய தயார் – சுப்மான் கில் உறுதி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இந்திய அணியில் இளம் வீரரான கில் தேர்வாகியுள்ளார்.

Gill

- Advertisement -

இந்நிலையில் அவர் இந்தத் தொடர் குறித்தும் தனது பேட்டிங் இடம் குறித்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியதாவது : இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக நான் தேர்வாகியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் நீல நிற அல்லது வெள்ளை நிற உடையை அதாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி என எதுவாக இருந்தாலும் சரி என்னுடைய ஆட்டத்தை நான் இந்திய அணிக்காக சிறப்பாக வழங்குவேன். மேலும் நான் தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் அணிக்கு என்னுடைய பங்களிப்பை நான் நிச்சயம் வழங்குவேன் அதுமட்டுமின்றி நான் துவக்க வீரராக களம் இறங்குவேன் என்று கூறவில்லை.

Gill 1

அணிக்கு என்ன தேவையோ இந்திய அணி நிர்வாகம் என்னிடம் எதை எதிர்பார்க்கிறதோ அந்த இடத்தில் நான் களமிறங்கி ரன் சேர்க்க விரும்புகிறேன். மேலும் எந்த இடத்தில் இறங்கினாலும் என்னால் ரன்கள் குவிக்க முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. அதனால் இந்திய அணிக்காக நான் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என்று கில் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement