Worldcup : இவரை உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யாதது வியப்பளிக்கிறது – கெயில்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

chris-gayle
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான கெயில் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி உலககோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இந்திய அணியில் வீரரான அஸ்வினை சேர்க்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் அஸ்வின் சிறப்பான வீரர்.

Ashwin

மேலும், பந்துவீச்சு மற்றும் இன்றி கேப்டன்சியும் அஸ்வின் சிறப்பாக செயல்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கும் போதே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் அது ஏன் என்று புரியவில்லை அதேபோன்று அவரை தற்போது உலகக்கோப்பை தொடரில் சேர்க்காததும் வருத்தம் அளிக்கிறது என்று கெயில் கூறினார்.

Advertisement