டி20 உலகக்கோப்பையில் ரோஹித்துடன் இவரே துவக்க வீரராக விளையாட வேண்டும் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் இந்திய அணியின் நிர்வாகம் ஆன பி.சி.சி.ஐ-யும் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்தவகையில் இந்த தொடரில் விளையாட கூடிய இந்திய அணி குறித்து சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

IND

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக கோலியுடன் விராட் கோலி களமிறங்கினால் அது சிறப்பாக இருக்கும். ஏனெனில் ரோகித் உடன் கோலி துவக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் நல்ல துவக்கம் கிடைப்பது உறுதி அதுமட்டுமின்றி மூன்றாவது வரிசையில் சூரியகுமார் யாதவும் நான்காவது வரிசையில் ராகுலும் களமிறங்கலாம்.

ரோஹித்துடன் விராட் கோலி களமிறங்கும் பட்சத்தில் இந்திய அணி சிறப்பான துவக்கத்தில் பெறும் இதன் காரணமாக ரோஹித் மற்றும் கோலி ஜோடியே துவக்க வீரர்களாக களம் இறங்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Rohith-1

ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் விராட் கோலி தான் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறியது மட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் விராட்கோலி ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement