MS Dhoni : உலகக்கோப்பை இந்திய அணியில் இவரே முக்கிய வீரராக திகழ்வார் – கவாஸ்கர் நம்பிக்கை

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்

sunil-gavaskar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது : இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையிலே உள்ளது. ஆனாலும், பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணி தேர்வில் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ராயுடு, விஜய் ஷங்கர் துவங்கி தற்போது பண்ட் இடம்பெறாதது வரை பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

- Advertisement -

MSdhoni

இந்நிலையில் தோனியின் இடம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். அவரின் அனுபவம் இந்த தொடரில் கண்டிப்பாக பெரிதும் உதவும். மேலும், அவர் ஒரு டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலககோப்பை என பல தொடர்களில் தனது சாமர்த்தியமான கேப்டன்சி மூலம் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார்.

dhoni
dhoni

மேலும், இறுதி ஓவர்களில் பீல்டர்களின் இடம் மற்றும் எந்த பவுலர்களை உபயோகிப்பது என பலவற்றிலும் தோனி கைதேர்ந்தவர். எனவே இந்த உலகக்கோப்பையில் அவர் இந்திய அணிக்காக அவர் நிச்சயம் உதவியாக இருப்பார் என்று கவாஸ்கர் கூறினார்.

Advertisement