இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரில் சுப்மன் கில்லின் சொதப்பலுக்கு இதுவே காரணம் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

cup

- Advertisement -

இதனை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் தற்போது 2-வது நாளாக தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. துவக்க வீரர் நேற்றைய ஆட்டத்தின் போது டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரின் போது அறிமுகமான கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் ஓப்பனர் இடத்திற்கு பலர் போட்டியில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே கில் பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் 29, 50, 0, 14,11, 15, 0 என அடுத்தடுத்து ஏமாற்றத்தை அளித்து வருகிறார்.

gill

இந்நிலையில் அவரது இந்த தொடர்ச்சியான சொதப்பலுக்கு காரணம் என்ன என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஒரு மோசமான காலகட்டம் இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான கில் அற்புதமாக விளையாடினார். அதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என நினைக்கிறேன்.

gill 1

மீண்டும் அவர் புதிதாக விளையாடுவது போன்று நினைத்து விளையாட வேண்டும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தன்னுடைய பேட்டியில் சிறிய அளவு மாற்றங்களை செய்தாலே போதும், அதனை சரி செய்து கொண்டால் அவர் எதிர்கொள்ளும் பந்துகளை அவரால் நன்றாக விளையாட முடியும். மேலும் அவர் எதிர்கொள்ளும் பந்துகளை நேராக விளையாடினால் அவரால் சிறப்பாக விளையாட முடியும். அப்படி விளையாடாத காரணத்தினால் அவர் அவுட் ஆகி விடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement