வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் உலககோப்பை தொடரின் வீரர்கள் பற்றிய தகவல்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ அறிவிப்பினை பி.சி.சி.ஐ வரும் 15 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து இந்திய அணியில் முன்னாள் வீரரும், ஜாம்பவான் ஆன கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் கவாஸ்கர் கூறியதாவது :இந்திய அணியில் தற்போது 4 ஆவது வீரராக களமிறங்க ராயுடு, பண்ட், ராகுல், விஜய் ஷங்கர் ஆகியோருக்கு இடையேயான போட்டி நிலவுகிறது. ஆனால், 4 ஆவது இடத்திற்கான எனது ஆதரவு ராகுலுக்கு தான் என்றே கூறுவேன். ஏனெனில் ராகுல் சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடும் திறன் கொண்டவர். அதனை நாம் பலமுறை இந்திய அணியில் விளையாடும்போதும் பார்த்துள்ளோம்.
நடந்து வரும் ஐ.பி.எல் தொடரிலும் ராகுல் பஞ்சாப் அணிக்கு பிரமாதமான ஆட்டத்தினை வழங்கி வருகிறார். எனவே, அவரின் இந்த பார்ம் உலகக்கோப்பையில் தொடரும் எனவே அவரை இந்திய அணியின் 4 ஆவது வீரராக களமிறக்குவது என் விருப்பம். மேலும், ஒருவேளை கோலி 4 ஆவது வீரராக ஆடினால் 3 ஆவது வீரராகவும் அவரால் விளையாட முடியும் என்று தெரிவித்தார்.