- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் வீரர்களே தயங்கிய நிலையில் பெரிய தொகையயை வழங்கிய கவாஸ்கர் – எவ்வளவு தெரியுமா ?

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறது. தற்போதுவரை பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசு ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவியை அரசாங்கத்திற்கு செய்து வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மக்களுக்கு உதவி செய்யவும் இந்த உதவித்தொகை பயன்படும். முன்னதாக பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாராளுமன்ற எம்.பி ஆன கம்பீர் மருத்துவ உபகரங்களுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். ரோஹித் 80 லட்சம் மற்றும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் இணைந்து 3 கோடி வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா (ரூபாய் 52 லட்சம்) மற்றும் யுவராஜ் 50 லட்சம், ரஹானே 10 லட்சம் என அனைவரும் தங்களது நிதியுதவினை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தனது பங்கிற்கு நிதியுதவியை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதன்படி கவாஸ்கர் 59 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அப்படி இவர் 59 லட்சம் நிதியுதவி வழங்க ஒரு காரணமும் இருக்கிறதாம். அதன்படி இந்திய அணிக்காக அவர் அடித்த 35 சதங்களை கணக்கில் கொண்டு பிரதமர் நிவாரணநிதி கணக்கில் 35 லட்ச ரூபாயையும், மகாராஷ்டிரா மாநிலத்துக்காக அடித்த 24 சதங்களை கணக்கில் கொண்டு மாநில நிவாரண நிதிக்கு 24 லட்சமும் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் 59 லட்சங்களை அவர் வழங்கி உள்ளார். தற்போது விளையாடும் வீரர்களே சில லட்சங்கள் வழங்கி வரும் நிலையில் ஓய்வு பெற்ற வீரரான கவாஸ்கர் 59 லட்சம் வழங்கி உள்ளது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
Published by