விராட் கோலியை ஈடன் கார்டன் ஏமாற்றாது. அவர் கொல்கத்தாவில் விளையாடும்போது இது நடக்கும் – கங்குலி உறுதி

Ganguly
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

Ground

- Advertisement -

கொல்கத்தா பகலிரவு போட்டி மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடைபெறும். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. எனவே தற்போது கொல்கத்தா மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய காத்திருக்கிறது. கோலி போன்ற ஒரு சிறப்பான வீரர் முழுவதும் ரசிகர்களால் நிறைந்திருக்கும் இதுபோன்ற மைதானங்களில் கோலி விளையாடுவது சிறப்பான ஒன்றாகும். நிச்சயம் அவரை கொல்கத்தா மைதானம் ஏமாற்றாது.

Kohli 4

பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் ஆரவாரத்துடன் அவர் பேட்டிங் செய்ய வேண்டும் எனவே முதல் மூன்று நாட்களுக்கு 60000 எண்ணிக்கையில் மக்கள் கூட்டத்தை அதிகமாக அவர் நிச்சயம் பெறுவார் என்றும் கங்குலி கூறினார். மேலும் பகலிரவு டெஸ்ட் மிகவும் தேவையான ஒன்று அது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நிறைய மாற்றங்களை நிச்சயமாக கொண்டுவரும். டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல இதுவும் ஒரு புதிய பாதையாக அமையும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement