Worldcup : உ.கோ தொடரின் அரையிறுதியில் இந்த அணிகளே பலப்பரீட்சை நடத்தும் – கங்குலி பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

ganguly
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும். இந்திய அணி தற்போது மிகுந்த பலத்துடன் திகழ்கிறது. வீரர்கள் அனைவரும் திறம்பட செயல்படுகிறார்கள் எனவே கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உலககோப்பையினை வெல்ல அதிகவாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்.

teamindia

அதேபோல் உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவாலாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கும். இந்த நான்கு அணிகள் உலககோப்பை அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெரும் என்பதிலும் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும், தோனியின் அனுபவமும் அவரது அறிவுரைகளும் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்றும் கங்குலி கூறினார்.

Advertisement