Worldcup : உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது சரிதான் – கங்குலி பேட்டி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

ganguly
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வில் விஜய் ஷங்கர் இடம்பெற்றது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் ஷங்கர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கங்குலி கூறியதாவது : தற்போது அனைவரும் விஜய் ஷங்கர் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகளை கூறி வருகின்றனர்.

- Advertisement -

Vijay Shankar

ஆனால், விஜய ஷங்கர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதனாலே அவரை இந்திய தேர்வுக்குழு நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. மேலும், இங்கிலாந்து மண்ணில் அவரால் ஓரளவு சிறப்பாக பந்துவீசவும் முடியும். பேட்டிங்கிலும் அவர் நன்றாகவே செயல்படுகிறார்.

shankar

இந்திய தேர்வுக்குழுவின் முடிவு தப்பாகாது. அவர்கள் தேர்வு செய்து இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே, எதிர்மறை கருத்துக்களை விடுத்தது உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு நமது ஆதரவினை அளிப்போம் என்று கங்குலி கூறினார்.

Advertisement