அவர் என்ன பண்ணாரு இப்போ. அவரை பத்தி பேச எதுவும் இல்ல – ரவி சாஸ்திரி குறித்து கங்குலி பதில்

Ganguly-2
- Advertisement -

பிசிசிஐயின் புதிய தலைவராக கங்குலி வரும் 23ம் தேதி முறைப்படி பதவியேற்க உள்ளார். பிசிசிஐயின் தலைவராக கங்குலி பதவியேற்ற பின்னர் இந்திய அணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் தான் பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியில் செய்ய உள்ள மாற்றங்கள் மற்றும் அணியின் மேம்பாடு குறித்து அவர் செய்ய இருக்கும் திட்டங்கள் அனைத்து குறித்தும் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இந்திய அணியில் இருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது அதற்கு கங்குலி சிறிது கிண்டலாக பதில் அளித்தார். அதில் கங்குலி கூறியதாவது : சரி ரவி சாஸ்திரி இப்போ என்ன செஞ்சார் ? அவரைப் பற்றி பேச இப்போதைக்கு எதுவும் இல்லை. அவர் என்ன புதிதாக ஏதாவது செய்தாரா ? என கேள்விக்கு பதிலளித்து சிரித்தபடி சென்றார்.

Ganguly 1

இதற்கு முன்னதாக பயிற்சியாளராக கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவரை நிராகரித்தது கங்குலி தலைமையிலான தேர்வுக்குழு தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பி.சி.சி.ஐ யின் தலைவராக கங்குலி தேர்வாகியுள்ளது ரவி சாஸ்திரிக்கு சற்று நெருடலாக இருக்கும் என்பது உண்மைதான்.

Advertisement