மே.இ தீவுகள் அணிக்கு எதிராக இந்த 2 பேரை தேர்வு செய்யாதது வருத்தமளிக்கிறது – கங்குலி

Ganguly
Ganguly
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

ind

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி இந்திய அணியின் தேர்வு குறித்து ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்தது நல்ல முடிவுதான்.

அதேபோன்று ஒரு சிலரை நீங்கள் தவிர்த்தது எனக்கு வருத்தமளிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா ஏ அணி தற்போது விளையாடி முடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்ற சுப்மான் கில் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு ஆகக்கூடிய தகுதி கொண்ட ஒரு வீரர் ஆவார்.

Rahane

Gill

மேலும் அதனைப் போன்றே ஒருநாள் அணியில் நான்காமிடத்தில் ரஹானேவை தேர்வு செய்திருக்கலாம். அவரையும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த இரு இரு வீரர்களின் தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாகவும், வருத்தம் அளிக்கும் ஒன்றாகவும் உள்ளது. விரைவில் இந்திய அணியின் தேர்வுக்குழு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கங்குலி கூறினார்.

Advertisement