காயமடைந்த பாண்டியா இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ? – கங்குலி கூறிய பதில்

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி இருந்தார்.

Pandya

- Advertisement -

ஆனால் அதன்பிறகு நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் பாண்டியா தேர்வு அடையவில்லை என்பதாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவர் உடல் இன்னும் ஒத்துழைப்பு தராத காரணத்தாலும் அவர் அணியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்த தொடரிலும் ஷிவம் துபே இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இந்திய அணியின் முக்கியமான ஆல்ரவுண்டரான ஹர்டிக் பண்டியா இல்லாதது அவருக்கும், அணியாகும் பெரிய இழப்பு தான். ஏனெனில் பாண்டியா பந்துவீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் என அசத்தும் திறனுடையவர். இந்நிலையில் பாண்டியா குறித்து நேற்று கங்குலி கூறுகையில் : பாண்டியாவின் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் இந்திய அணிக்கு திரும்ப சில காலம் தேவைப்படும்.

Pandya

அவர் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த சிகிச்சை மற்றும் உடல் கண்காணிப்புக்கு பிறகு அவர் முழு உடல் தகுதியுடன் இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவார் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரிலும் பாண்டியா இடம்பெறுவது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement