பி.சி.சி.ஐ யின் தலைவராக பொறுப்பேற்ற பின் இதுவே எனது முதல் வேலை – கங்குலி பேட்டி

Ganguly
- Advertisement -

சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வரும் 23 தேதி முதல் தனித்து செயல்பட உள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐயின் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பொறுப்பிற்கு கங்குலியின் பெயர் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ganguly-bcci 2

மேலும் கங்குலி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் உள்ளதால் பிசிசிஐ தலைவராக அவர் பொறுப்பை ஏற்றாலும் 9 மாதங்களே அதாவது ஜூலை 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே பிசிசிஐ தலைவராக இருக்க முடியும்.

- Advertisement -

இந்நிலையில் தான் தலைவராக பொறுப்பேற்றால் உடனே செய்ய உள்ள வேலை பற்றி கங்குலி தற்போது பேட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். அது குறித்து கூறியதாவது : பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏனென்றால் பிசிசிஐயின் இமேஜ் தற்போது சரிவில் உள்ளது. அதனை சரிசெய்யும் ஒரு அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

Ganguly

மேலும் நான் பொறுப்பேற்ற பிறகு முதலில் செய்ய இருப்பது முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். இதுகுறித்து பலமுறை நான் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நான் பொறுப்பேற்ற பின் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முக்கியத்துவம் கொடுப்பேன் மேலும் முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்னுரிமை வழங்குவேன். பிசிசிஐ தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இது மிகப்பெரிய பொறுப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய நிர்வாகம் பிசிசிஐ தான் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement