19 வருஷம் ஆச்சு நான் இப்படி இருந்து. பதவியேற்றதும் கங்குலி கூறிய முதல் வார்த்தை இதுதானாம் – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் புதிய தலைவராக இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரபூர்வமாக பதவியேற்றார். இவர் பிசிசிஐயின் 39 தலைவராக இன்று பதவி ஏற்றார். அத்துடன் பிசிசிஐ தலைமைப் பொறுப்பை ஏற்ற இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கங்குலி இன்று பெற்றார்.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கங்குலி பிசிசிஐ-யின் சின்னம் பொறிக்கப்பட்ட கோட்டை அணிந்து இருந்தார். அப்போது அந்த கோர்ட் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வியை கங்குலி இடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கங்குலி :

நான் முதன் முதலில் பதவியேற்ற போது கொடுக்கப்பட்ட கோர்ட் இதே வடிவமுடையது. இன்று அதனை 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் தலைவராக பதவி ஏற்ற பின் அணிந்துள்ளேன். இந்த கோட் எனக்கு லூசாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த கோட்டை அணிவது எனக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது போல மிகப் பெருமையாக உள்ளது என்று கூறினார்.

Ganguly 1

கங்குலி கடைசியாக 2000 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக முதன் முதலில் பதவி ஏற்ற போது இதே லோகோ கொண்ட கோட்டை அணிந்து இந்திய போட்டிகளில் கேப்டனாக டாஸ் போட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement