இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆன பிசிசிஐ தற்போது ராகுல் டிராவிட் இரட்டை பதவி வைத்திருப்பதாகவும் அதற்காக தகுந்த விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் ஒன்றினை அவருக்கு அனுப்பி உள்ளது.
பிசிசிஐ டிராவிட் குறித்து குறிப்பிட்டதாவது : தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இது இரட்டை ஆதாயம் தரும் பதவி எனவே வருகின்ற 16ம் தேதிக்குள் டிராவிட் உரிய விளக்கத்தை பிசிசிஐக்கு அளிக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.
இதனைப் போன்று பிசிசிஐ செயல்படுவது ஒன்றும் புதிதல்ல சச்சின் கங்குலி லட்சுமணன் ஆகியோருக்கும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது :
New fashion in indian cricket …..conflict of interest ….Best way to remain in news …god help indian cricket ……Dravid Gets Conflict of Interest Notice from BCCI Ethics Officer https://t.co/3cD6hc6vsv.
— Sourav Ganguly (@SGanguly99) August 6, 2019
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இது ஒரு பேஷனாக மாறிவிட்டது அடிக்கடி செய்திகளில் இடம் பெறவே இதனை போன்று செய்து வருகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார் மேலும் இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் பிசிசிஐ குறித்து காட்டமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது