இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது, நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் விளையாட இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி : இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன அதில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் இந்திய அணி மீண்டும் வலிமையுடன் திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலாவது போட்டி இந்திய அணிக்கு மோசமான நாளாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The next two one dayers against Australia will be a cracker . This indian team is a strong team .. just had a bad day in office .. been in this situation before and have come back to win from 2-0 down two seasons ago ..good luck @imVkohli @BCCI @My11Circle pic.twitter.com/yfV09iPk85
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2020
இந்திய அணி இது போன்று பல முறை தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது என்றும் இந்திய அணி மீண்டும் முழுபலத்துடன் திரும்பும் என்றும் குறிப்பிட்டு குட்லக் என வாழ்த்துக்களையும் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலியின் இந்த பதிவு இணையத்தில் வைரலானது மட்டுமின்றி ரசிகர்களின் கருத்துகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.