கொல்கத்தா மட்டுமல்ல இனி இந்த மைதானங்களிலும் “டே நைட்” டெஸ்ட் நடைபெறும் – கங்குலி அதிரடி

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்ற பின் பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி வருகிறார். அதன் முதல் படியாக இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தி அனைவரையும் அசர வைத்தார் கங்குலி அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் குறித்த பல்வேறு ஆக்கபூர்வ அம்சங்களை செய்லபடுத்த ஆலோசனையும் செய்து வருகிறார்.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளார் கங்குலி. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னொரு அணியும் சேர்த்து நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடம் கங்குலி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்படி இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையும் பட்சத்திலும், ஐ.சி.சி இதற்கு அனுமதிக்கும் பட்சத்திலும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சூப்பர் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் கொல்கத்தா மைதானம் மட்டுமின்றி சில இந்திய மைதானங்களில் நடைபெறும் என்றும் கங்குலி முடிவு செய்துள்ளார்.

Ground-1

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டியாவது பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் மேலும் இந்த போட்டிகள் கொல்கத்தா மட்டுமின்றி மும்பை, பெங்களூர் மற்றும் குஜராத் ஆகிய மூன்று இடங்களிலும் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement