- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 4ஆவது வீரர் இவர் தான் – கங்குலி, பாண்டிங் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-2என்ற கணக்கில் பரிதாபமாக பறிகொடுத்தது. இதனால் இந்திய அணிக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கலவையாக முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்தன.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 4ஆவது வீரராக களமிறங்குபவர் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தங்களது கருத்த்துக்களை தெரிவித்தனர். அதில் கங்குலி கூறியதாவது :

- Advertisement -

நான் ஏற்கனவே கூறியது போல இந்திய அணியை சேர்ந்த புஜாரா தான் உலகக்கோப்பை அணியில் 4ஆவது வீரராக களமிறங்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில், வெளிநாடுகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருபவர் புஜாரா. அவரின் நிலையான ஆட்டம் நிச்சயம் இந்திய அணிக்கு உதவும் என்று கங்குலி தெரிவித்தார்.

இதுகுறித்து பாண்டிங் கூறியதாவது : இந்திய அணியின் பண்ட் உலகக்கோப்பை அணியில் 4ஆவது வீரராக களமிறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அவர் பங்கேற்ற முதல் இங்கிலாந்து தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்தவர் பண்ட். மேலும், அவரிடம் உள்ள அபரிவிதமான திறமையை நான் நேரில் பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்தார். பாண்டிங் தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by