யார் என்ன சொன்னாலும் இவர் இன்றைய டி20 போட்டியில் விளையாட வேண்டும் – கம்பீர் உறுதி

Gambhir
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோன்று தென்ஆப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

pant 1

யார் என்ன சொன்னாலும் சரி இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் நிச்சயம் விளையாட வேண்டும்.
அவரின் திறமையை அவர் சிறப்பாக விளையாடி நிரூபிக்க வேண்டும். மேலும் அணிக்கு அவர் தேவை என்பதை அவரிடம் யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டே இருந்தால் அவர் நிச்சயம் இந்த போட்டியில் சாதிப்பார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர் நிச்சயம் இன்றைய போட்டியில் விளையாட வேண்டும் என்று கம்பீர் கூறினார்.

Advertisement